ஜோதிட சந்திரசேகர பாரதி வழங்கும்
வார ராசிபலன்: 20-5-2010 முதல் 27-05-2010 வரை
மேஷம்: அசுவினி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம் முடிய.
முக்கியமான ஓரிரு எண்ணங்கள் இப்போது நிறைவேறும். பொது நலப்பணிகளில் ஈடுபாடு அதிகரிக்கும். முக்கியப் பதவிகள் தேடி வரும். எண்ணெய் வகையறாக்கள், தோல் பொருட்கள் ஆகியவை லாபம் தரும். எதிரிகள் விலகிப் போவார்கள். கூட்டாளிகளாலும், வாழ்க்கைத்துணைவராலும் அனுகூலம் உண்டாகும். கலைஞர்களுக்கு வரவேற்பு கூடும். மாதர்களுக்கு மன உற்சாகம் பெருகும். விருந்து, உபசாரங்களில் கலந்து கொள்வீர்கள். சுப காரியங்களுக்காகச் செலவு செய்ய வேண்டிவரும். அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் உதவுவார்கள். வியாபாரிகள் விழிப்புடன் செயல்படுவது நல்லது. மாணவர்கள் படிப்பில் முழுக்கவனம் செலுத்துவது அவசியமாகும். 2-ல் சூரியன் இருப்பதால் பேச்சில் நிதானம் தேவை. 26-ஆம் தேதி முதல் செவ்வாய் 5-ஆமிடம் மாறுவது கோசாரப்படி சிறப்பாகாது. என்றாலும் ராசிநாதன் என்ற வகையில் ஓரிரு அதிர்ஷ்ட வாய்ப்புக்கள் உண்டாகும். மக்களால் நல்லதும் அல்லாததும் கலந்தவாறு ஏற்படும். வயிறு சம்பந்தப்பட்ட உபாதைகள் ஏற்பட்டு விலகும். கேது 3-ல் இருப்பதால் மனத்துணிவு அதிகரிக்கும். பிரச்னைகள் குறையும்.
அதிர்ஷ்ட தேதிகள்: மே 23, 24, 26.
திசைகள்: தென்கிழக்கு, மேற்கு, வடமேற்கு.
எண்கள்: 6, 7, 8.
--------------------------------------------------------------------------------
ரிஷபம்: கிருத்திகை 2-ஆம் பாதம் முதல், ரோகிணி, மிருகசீரிஷம் 2-ஆம் பாதம் முடிய.
செவ்வாய், குரு, சுக்கிரன் ஆகியோரது சஞ்சாரம் அனுகூலமாக இருப்பதால் உங்கள் ஆற்றல் பளிச்சிடும். எதிர்ப்புக்களைக் கடந்து வாழ்வில் வெற்றி பெறுவீர்கள். தொட்டது துலங்கும். போட்டிப் பந்தயங்களில் வெற்றி கிட்டும். நிலபுலங்கள் சேரும். பொருளாதார நிலையில் அபிவிருத்தி உண்டாகும். திருமணம் போன்ற சுப காரியங்கள் நிகழும். விருந்து, உபசாரங்களிலும்; கேளிக்கை, உல்லாசங்களிலும் ஈடுபடுவீர்கள். அதனால் மன மகிழ்ச்சி உண்டாகும். கொடுக்கல்-வாங்கல் இனங்கள் லாபம் தரும். திடீர் அதிர்ஷ்ட வாய்ப்புக்களும் கூடிவரும். நல்லவர்கள் உங்களுக்குப் பக்கபலமாக இருப்பார்கள். தெய்வ தரிசனம், சாது தரிசனம் ஆகியவை கிட்டும். செய்தொழில் வளர்ச்சி பெறும். ஜன்ம ராசியில் சூரியன் இருப்பதால் உஷ்ணாதிக்கத்தால் உடல் நலம் பாதிக்கும். 2-ல் கேதுவும், 8-ல் ராகுவும் இருப்பதால் சிறுசிறு இடர்ப்பாடுகள் அவ்வப்போது ஏற்படும் என்றாலும் குரு பலத்தால் சமாளித்து விடுவீர்கள். புதியவர்களிடம் எச்சரிக்கை தேவை. புதன் 12-ல் இருப்பதால் வியாபாரிகள் நஷ்டப்பட நேரலாம். 26-ஆம் தேதி முதல் செவ்வாய் 4-ஆமிடம் மாறுவது சிறப்பாகாது. உறவினர்களாலும் நண்பர்களாலும் பிரச்னைகள் ஏற்படும். யாரிடத்திலும் வெளிப்படையாகப் பழகலாகாது. எக்காரியத்திலும் பதற்றம் கூடாது. பொறுமை அவசியம் தேவை. இயந்திரங்கள், போக்குவரத்துச் சாதனங்கள் ஆகியவற்றில் பணிபுரிபவர்கள் விழிப்புடன் செயல்படுவது நல்லது. சிறு விபத்துக்கு ஆளாக நேரலாம்.
அதிர்ஷ்ட தேதிகள்: மே 23, 24, 26.
திசைகள்: தென்கிழக்கு, வடகிழக்கு, தெற்கு.
எண்கள்: 3, 6, 9.
--------------------------------------------------------------------------------
மிதுனம்: மிருகசீரிஷம் 3-ஆம் பாதம் முதல், திருவாதிரை, புனர்பூசம் 3-ஆம் பாதம் முடிய.
ராசிநாதன் புதன் 11-ல் உலவுவது சிறப்பாகும். இதனால் உங்கள் அறிவாற்றல் பளிச்சிடும். வியாபாரத்தில் அபிவிருத்தி காண்பீர்கள். கணிதம், எழுத்து, பத்திரிகை, சிற்பம், ஓவியம், தரகு போன்ற துறைகளைச் சேர்ந்தவர்களுக்கு வருமானம் கூடும். நண்பர்களும் உறவினர்களும் உங்களுக்கு உதவிக் கரம் நீட்டுவார்கள். குறிப்பாக மாமன் வகையினரால் அதிகம் நலம் உண்டாகும். சுக்கிரன் ஜன்ம ராசியில் இருப்பதால் ஆடை, அணிமணிகள், அலங்காரப் பொருட்களின் சேர்க்கை நிகழும். கலைத்துறையினருக்கு வரவேற்பு கூடும். மாதர்கள் அளவோடு நலம் பெறுவார்கள். இதர கிரகங்கள் கோசாரப்படி அனுகூலமாக உலவாததால் குடும்ப நலம் கவனிக்கப்பட வேண்டிவரும். அலைச்சலும் உழைப்பும் கூடும். செய்து வரும் தொழிலில் முழுக்கவனம் தேவை. கண், முகம், வாய் சம்பந்தப்பட்ட உபாதைகள் ஏற்படும். 26-ஆம் தேதி முதல் செவ்வாய் 3-ஆமிடம் மாறுவதால் உங்கள் பராக்கிரமம் கூடும். குடும்பப் பிரச்னைகள் குறையத் தொடங்கும். பொறியியல், சட்டம், காவல், ராணுவம் போன்ற துறைகளைச் சேர்ந்தவர்கள் வெற்றிப்படிகளில் ஏறுவார்கள். துணிச்சலான காரியங்களில் ஈடுபாடு அதிகரிக்கும். நிலம், மனை, வீடு, வாகனம் போன்ற சொத்துக்கள் சேரும். சொத்துக்களால் ஆதாயமும் கிடைக்கும்.
அதிர்ஷ்ட தேதிகள்: மே 23, 24, 26.
திசைகள்: வடக்கு, தென்கிழக்கு.
எண்கள்: 5, 6.
--------------------------------------------------------------------------------
கடகம்: புனர்பூசம் 4-ஆம் பாதம் முதல், பூசம், ஆயில்யம் முடிய.
குரு 9-ல் இருப்பதால் உங்கள் புத்திசாலித்தனம் பளிச்சிடும். நல்லவர்கள் உங்களுக்கு உதவி புரிவார்கள். தொலைதூரத் தொடர்பு பயன்படும். செல்வாக்கும் மதிப்பும் உயரும். பிரச்னைகள் எளிதில் தீரும். மகப்பேறு அல்லது மக்களால் பாக்கியம் உண்டாகும். பொருளாதாரநிலையில் விசேடமான வளர்ச்சியைக் காணலாம். திடீர் அதிர்ஷ்ட வாய்ப்புக்களும் கூடிவரும். திருமணம் போன்ற சுப காரியங்கள் நிகழும். குடும்பத்தில் குதூகலம் நிறைந்திருக்கும். முன்னேற்றத்திற்கான தகவல் வந்து சேரும். பொது நலப்பணியாளர்களுக்கும் அரசியல்வாதிகளுக்கும் வரவேற்பு அதிகரிக்கும். அயல்நாட்டுத் தொடர்பு பயன்படும். நண்பர்களும் உறவினர்களும் உதவுவார்கள். வியாபாரம் பெருகும். அரசுப்பணிகள் ஆக்கம் தரும். முக்கியப் பதவிகளும் பட்டங்களும் கிடைக்கும். ஊதிய உயர்வு, இடமாற்றம் ஆகியவற்றைப் பெறுவதற்குச் சந்தர்ப்பம் கூடிவரும். 26-ஆம் தேதி முதல் செவ்வாய் 2-ஆமிடம் மாறுவது சிறப்பாகாது. வீண் வம்பு, வழக்குகளைத் தவிர்ப்பது நல்லது. அக்கம்பக்கத்தாரிடம் சுமுகமாகப் பழகுவது அவசியமாகும். வீண் செலவுகளைத் தவிர்க்கவும். செவ்வாய் உங்கள் ராசிக்கு யோக காரகன் என்பதாலும், 2-ஆம் வீட்டுக்கு அதிபதியான சூரியன் 11-லும், குரு 9-லும் இருப்பதாலும் செல்வச் செழிப்பு உண்டாகும். தந்தையால் அதிகம் பயன் பெறுவீர்கள். அரசாங்கத்தாராலும் அனுகூலம் உண்டாகும். அரசுப் பதவி பெற வாய்ப்புண்டு.
அதிர்ஷ்ட தேதிகள்: மே 23, 24, 26.
திசைகள்: மேற்கு, தென்மேற்கு, கிழக்கு, வடக்கு, தென்கிழக்கு, வடகிழக்கு.
எண்கள்: 1, 3, 4, 5, 6, 8.
--------------------------------------------------------------------------------
சிம்மம்: மகம், பூரம், உத்திரம் 1-ஆம் பாதம் முடிய.
ராசிநாதன் சூரியன் 10-ஆமிடத்தில் உலவுவது விசேடமாகும். இதனால் உங்கள் ஆற்றல் பளிச்சிடும். எடுத்த காரியங்களில் வெற்றி பெறுவீர்கள். அரசு உதவி கிட்டும். அரசுப்பணியாளர்களும் அரசியல்வாதிகளும் தங்கள் நிலை உயரப் பெறுவார்கள். நிர்வாகத்துறையினருக்கு வரவேற்பு அதிகரிக்கும். தந்தையால் அனுகூலம் உண்டாகும். புதிய பதவி, பட்டங்கள் கிடைக்கும். சுக்கிரனும் கேதுவும் 11-ல் இருப்பதால் கலைஞர்களுக்கு வெற்றி வாய்ப்புக்கள் அதிகரிக்கும். மாதர்களது எண்ணம் ஈடேறும். எதிர்ப்புக்கள் குறையும். 8-ல் குரு இருந்தாலும் அவரது பார்வை 12, 2, 4-ஆம் இடங்களுக்கும் செவ்வாய், சனி ஆகியோருக்கும் பதிவதால் வீண் விரயம் குறையும். குடும்ப நலம் சீராக இருந்து வரும். ஏழரைச் சனியால் இதுவரையிலும் ஏற்பட்டு வந்த இன்னல்கள் குறையும். நண்பர்கள், உறவினர்களால் அனுகூலம் உண்டாகும். நிலபுலங்கள் ஓரளவு லாபம் தரும். ராகு 5-ல் இருப்பதால் மக்களால் மன அமைதி குறையும். வயிறு சம்பந்தப்பட்ட உபாதைகள் ஏற்படும். 26-ஆம் தேதி முதல் செவ்வாய் ஜன்ம ராசிக்கு மாறுவது சிறப்பாகாது. உஷ்ணாதிக்கம் கூடும். கோபத்தைக் குறைத்துக் கொள்வது நல்லது. இயந்திரப்பணியாளர்களும் இன்ஞினீயர்களும் பொறுப்புடன் செயல்பட்டால் வளர்ச்சி காணலாம். பயணத்தின்போது விழிப்புத் தேவை.
அதிர்ஷ்ட தேதிகள்: மே 23, 24, 26.
திசைகள்: கிழக்கு, தென்கிழக்கு, வடமேற்கு.
எண்கள்: 1, 3, 6, 7.
--------------------------------------------------------------------------------
கன்னி: உத்திரம் 2-ஆம் பாதம் முதல், ஹஸ்தம், சித்திரை 2-ஆம் பாதம் முடிய.
ராசிநாதன் புதன் அனுகூலமாக உலவுவதாலும், குரு வலுத்திருப்பதாலும் உங்கள் அறிவாற்றல் பளிச்சிடும். எடுத்த காரியங்களில் வெற்றி பெறுவீர்கள். நல்லவர்களது தொடர்பு நலம் கூட்டும். பொருளாதார நிலை உயரும். ஸ்பெகுலேஷன், கொடுக்கல்-வாங்கல் இனங்கள் லாபம் தரும். வியாபாரத்தில் அபிவிருத்தி காண வழிபிறக்கும். மாணவர்கள் வெற்றி நடைபோடுவார்கள். கூட்டுத் தொழில் லாபம் தரும். உத்தியோகஸ்தர்கள், ஆசிரியர்கள், மதபோதகர்கள் ஆகியோர் தங்கள் நிலை உயரப் பெறுவார்கள். திருமணம் ஆகாதவர்களுக்கு அதற்கான வாய்ப்புக் கூடிவரும். திருமணம் ஆனவர்களுக்கு இல்லறம் நல்லறமாய்த் திகழும். தெய்வப் பணிகளிலும் தருமப் பணிகளிலும் ஈடுபாடு கூடும். செவ்வாய் 11-ல் உலவுவதால் பொறியியல் துறை லாபம் தரும். கடல் வாணிபத்தால் ஆதாயம் அதிகரிக்கும். திரவப் பொருட்கள், செந்நிறப்பொருட்கள் மூலம் லாபம் பெருகும். ஜன்மத்தில் சனியும், 4-ல் ராகுவும் இருப்பதால் அலைச்சலைத் தவிர்க்க இயலாது. உடல் அசைதி ஏற்படும். 26-ஆம் தேதி முதல் செவ்வாய் 12-ஆமிடம் மாறுவதால் பொருள் இழப்பு உண்டாகும். கைப்பொருளைப் பத்திரப்படுத்தி வைத்துக் கொள்வது நல்லது. விளையாட்டு விநோதங்களில் எச்சரிக்கை தேவை. தீ, மின்சாரம், ஆயுதங்கள், வெடிப் பொருட்கள் ஆகியவற்றின் பக்கம் நெருங்கும்போது விழிப்புடன் இருந்தால் விபத்துக்கு ஆளாகாமல் தப்பலாம்.
அதிர்ஷ்ட தேதிகள்: மே 23, 24, 26.
திசைகள்: வடக்கு, வடமேற்கு, தெற்கு, வடகிழக்கு.
எண்கள்: 3, 5, 7, 9.
--------------------------------------------------------------------------------
துலாம்: சித்திரை 3-ஆம் பாதம் முதல், சுவாதி, விசாகம் 3-ஆம் பாதம் முடிய.
ராசிநாதன் 9-ல் உலவுவது விசேடமாகும். செவ்வாயும் வாரம் முழுவதும் அனுகூலமாகவே சஞ்சரிக்கிறார். ராகு 3-ல் இருப்பதும் குறிப்பிடத்தக்கது. இதனால் உங்கள் தோற்றப்பொலிவும் செயல்திறமையும் கூடும். தான, தருமப்பணிகளிலும் தெய்வப் பணிகளிலும் பங்கு கொள்வீர்கள். தொலைதூரத் தொடர்பு பயன்படும். கலைத்துறையினருக்கு வெற்றி வாய்ப்புக்கள் அதிகரிக்கும். எதிரிகள் அடங்கிப் போவார்கள். வழக்கு, வியாஜ்ஜியங்களில் வெற்றி கிட்டும். பொறியியல், சட்டம், காவல், ராணுவம் போன்ற துறைகளைச் சேர்ந்தவர்களுக்கு வெற்றி வாய்ப்புக்கள் கூடும். செந்நிறப் பொருட்கள் லாபம் தரும். உடன் பிறந்தவர்கள் உதவுவார்கள். குடும்ப நலம் திருப்தி தரும். அயல்நாட்டுத் தொடர்புடன் தொழில் புரிபவர்களுக்கு முன்னேற்றமான போக்கு நிலவிவரும். பயணத்தால் ஒரு எண்ணம் ஈடேறும். கணவன் மனைவி உறவு நிலை திருப்தி தரும். 6-ல் குரு இருப்பதாலும், 12-ல் சனி உலவுவதாலும் மக்களால் சிறு சங்கடம் ஏற்படும். 8-ல் சூரியன் இருப்பதால் அரசு விவகாரங்களில் விழிப்புத் தேவை. மேலதிகாரிகள், பெரியவர்கள் ஆகியோரது அதிருப்திக்கு ஆளாகாமல் இருப்பது நல்லது. உத்தியோகஸ்தர்கள், தொழிலாளர்கள், ஆன்மிகவாதிகள், ஆசிரியர்கள், விவசாயிகள் ஆகியோர் தங்கள் கடமைகளைச் சரிவர ஆற்றிவருவது அவசியமாகும். வியாபாரிகள் அகலக்கால் வைக்கலாகாது.
அதிர்ஷ்ட தேதிகள்: மே 22, 26, 27.
திசைகள்: தென்மேற்கு, தென்கிழக்கு, தெற்கு.
எண்கள்: 4, 6, 9.
--------------------------------------------------------------------------------
விருச்சிகம்: விசாகம் 4-ஆம் பாதம் முதல், அனுஷம், கேட்டை முடிய.
குரு பலம் காரணமாக உங்கள் புத்திசாலித்தனம் பளிச்சிடும். மனத்தில் தெளிவு பிறக்கும். தெய்வானுக்கிரகம் உண்டாகும். நல்லவர்கள் உங்களுக்கு உதவி புரிவார்கள். பண நடமாட்டம் திருப்தி தரும். திடீர் அதிர்ஷ்ட வாய்ப்புக்களும் கூடிவரும். உத்தியோகஸ்தர்கள், ஆன்மிகவாதிகள், ஆசிரியர்கள் ஆகியோர் தங்கள் நிலை உயரப் பெறுவார்கள். மக்களால் மன மகிழ்ச்சி உண்டாகும் மகப்பேறு பாக்கியமும் கிட்டும். திரவப் பொருட்கள் லாபம் தரும். புதன் 6-ல் இருப்பதால் வியாபாரம் பெருகும். மாணவர்களது திறமை பளிச்சிடும். சுக்கிரன் 8-ல் இருப்பதால் கலைஞர்களுக்கு அளவோடு நலம் உண்டாகும். புதனாலும் சுக்கிரனாலும் விபரீத ராஜயோகம் ஏற்படும். எதிர்பாராத தனப்பிராப்தியைப் பெறுவீர்கள். சனி 11-ல் இருப்பதாலும், குருவால் பார்க்கப்படுவதாலும் சொத்துக்கள் சேரும். ஆதாயம் கூடும். திறமைக்கும் உழைப்புக்கும் உரிய பயன் கிடைக்கத் தவறாது. 26-ஆம் தேதி முதல் செவ்வாய் 10-ஆமிடம் மாறுவதால் வெற்றி வாய்ப்புக்கள் அதிகரிக்கும். செய்து வரும் தொழிலில் விசேடமான வளர்ச்சியைக் காண வாய்ப்புக் கூடிவரும். உடல் நலம் சீர்பெறும். 2-ல் ராகுவும் 8-ல் கேதுவும் இருப்பதால் சிறுசிறு இடர்ப்பாடுகள் அவ்வப்போது ஏற்படும். துர்க்கையையும் விநாயகரையும் தொடர்ந்து வழிபடுவது நல்லது.
அதிர்ஷ்ட தேதிகள்: மே 23, 24.
திசைகள்: வடக்கு, வடகிழக்கு, தென்கிழக்கு, மேற்கு.
எண்கள்: 3, 5, 6, 8.
--------------------------------------------------------------------------------
தனுசு: மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம் முடிய.
ராசிநாதன் குரு 4-ல் இருந்தாலும் தன் சொந்த வீட்டில் இருப்பதால் நலம் புரிவார். சூரியன் 6-லும், சனி 10-லும் இருப்பதால் செய்து வரும் தொழிலில் அபிவிருத்தி காண வாய்ப்புக் கூடிவரும். நண்பர்களும் உறவினர்களும் உங்களுக்கு உதவுவார்கள். அரசுப் பணிகளில் வளர்ச்சி காணலாம். முக்கியமானவர்களது தொடர்பு பயன்படும். நிலம், மனை, வீடு, வாகனம் போன்ற சொத்துக்கள் சேரும். சொத்துக்களால் வருமானமும் கிடைக்கும். அரசியல் வாதிகளுக்கு வரவேற்பு அதிகரிக்கும். புதிய பதவிகளும் பட்டங்களும் தேடிவரும். எதிரிகள் குறைவார்கள். சுப காரியங்களில் பங்கு கொள்ளச் சந்தர்ப்பம் கூடிவரும். ஜன்ம ராசியில் ராகுவும், 7-ல் சுக்கிரனும் கேதுவும் இருப்பதால் அலைச்சலைத் தவிர்க்க இயலாமல் போகும். கணவன் மனைவி உறவு நிலை சீராக இராது. பங்குதாரர்களால் பிரச்னைகள் சூழும். பயணத்தின்போது விழிப்புத் தேவை. கலைஞர்களுக்கும் மாதர்களுக்கும் முன்னேற்றம் தடைப்படும். ஆடவர்களுக்குப் பெண்களால் சங்கடங்கள் உண்டாகும். மற்றவர்களிடம் சுமுகமாகப் பழகுவது அவசியமாகும். 26-ஆம் தேதி முதல் செவ்வாய் 9-ஆமிடம் மாறுவது கோசாரப்படி சிறப்பாகாது என்றாலும் உங்கள் ராசிக்குச் செவ்வாய் சுப பலன்களைத் தரக்கூடியவர் என்பதால் புனிதமான காரியங்களில் ஈடுபடுவீர்கள். தொலைதூரத் தொடர்பால் அனுகூலம் உண்டாகும். மக்களாலும், உடன் பிறந்தவர்களாலும் இதுவரையிலும் இருந்துவந்த பிரச்னைகள் குறையத் தொடங்கும்.
அதிர்ஷ்ட தேதிகள்: மே 23, 24, 26.
திசைகள்: கிழக்கு, வடக்கு, மேற்கு, வடகிழக்கு.
எண்கள்: 1, 3, 5, 8.
--------------------------------------------------------------------------------
மகரம்: உத்திராடம் 2-ஆம் பாதம் முதல், திருவோணம், அவிட்டம் 2-ஆம் பாதம் முடிய.
முக்கியமான கிரகங்களின் சஞ்சாரம் அனுகூலமாக இல்லாததால் எதிலும் விசேடமான நற்பலன்களை எதிர்பார்க்க இயலாது. மாமூலான காரியங்களில் மட்டுமே ஈடுபடுவது நல்லது. புதிய முயற்சிகளை ஒத்திப்போடுவது அவசியமாகும். பொருளாதாரம் சம்பந்தப்பட்ட இனங்களில் எச்சரிக்கை தேவை. மற்றையோரால் ஏமாற்றப்பட நேரலாம். மறதியால் அவதிப்பட வேண்டிவரும். கணவன் மனைவி இடையே கருத்து வேறுபாடுகள் உண்டாகும். கூட்டாளிகளால் பிரச்னைகள் கூடும். கலைஞர்களுக்கும் மாதர்களுக்கும் முன்னேற்றம் தடைப்படும். 4-ல் உள்ள புதனும், 6-ல் உள்ள கேதுவும் அறிவாற்றலையும் செயல்திறனையும் வெளிப்படுத்துவார்கள். மாணவர்களுக்கு அளவோடு வளர்ச்சி தெரியவரும். ஆன்மிகவாதிகள், ஜோதிடர்கள், கணிதத்துறையாளர்கள், பத்திரிகையாளர்கள், எழுத்தாளர்கள் ஆகியோர் தங்கள் திறமைக்குரிய வளர்ச்சியைக் காண்பார்கள். 26-ஆம் தேதி முதல் செவ்வாய் 8-ஆமிடம் மாறுவது சிறப்பாகாது. சிறு கண்டம் ஏற்படும். எதிலும் அவசரப்படாமல் நிதானமாக, ஒருமுறைக்குப் பலமுறை யோசித்து ஈடுபடுவது நல்லது. அலட்சியப்போக்கு அடியோடு கூடாது. வீண்வம்பு வேண்டாம். ஜாதகப்படி தற்சமயம் யோக பலம் உள்ள தசை, புக்தி, அந்தரங்கள் நடைபெறுமானால் கவலைப்படத் தேவையில்லை. ஜாதக பலமும் இல்லாதவர்கள் இறைவழிபாட்டிலும், கிரக வழிபாட்டிலும் ஈடுபடுவதன் மூலம் அமைதி காணலாம்.
அதிர்ஷ்ட தேதிகள்: மே 23, 24, 26.
திசைகள்: வடக்கு, வடமேற்கு.
எண்கள்: 5, 7.
--------------------------------------------------------------------------------
கும்பம்: அவிட்டம் 3-ஆம் பாதம் முதல், சதயம், பூரட்டாதி 3-ஆம் பாதம் முடிய.
செவ்வாய், குரு, சுக்கிரன், ராகு ஆகியோரது சஞ்சாரம் அனுகூலமாக இருப்பதால் உங்கள் மனத்தில் துணிவும் தன்னம்பிக்கையும் கூடும். எதிரிகள் அடங்குவார்கள். குடும்பத்தில் சுப காரியங்கள் நிகழும். பொருள்வரவு அதிகரிக்கும். ஸ்பெகுலேஷன், கொடுக்கல்-வாங்கல் இனங்கள் லாபம் தரும். பேச்சில் திறமை வெளிப்படும். தோற்றப்பொலிவு கூடும். வெளியூர், வெளிநாட்டுத் தொடர்புகள் பயன்படும். திடீர் அதிர்ஷ்ட வாய்ப்புக்களைப் பெறுவீர்கள். கடன் தொல்லை குறையும். பிரச்னைகள் எளிதில் தீரும். உத்தியோகஸ்தர்கள், ஆன்மிகவாதிகள், ஆசிரியர்கள் ஆகியோர் தங்கள் நிலை உயரப் பெறுவார்கள். கலைத்துறையினருக்கு சுபிட்சமான சூழ்நிலை நிலவிவரும். மாதர்களது எண்ணம் நிறைவேறும். போக்குவரத்துச் சாதனங்கள், தோல் பொருட்கள், கறுப்பு நிறப்பொருட்கள் ஆகியவை லாபம் தரும். தெய்வப் பணிகள் ஈடேறும். 3-ல் புதனும், 4-ல் சூரியனும், 5-ல் கேதுவும், 8-ல் சனியும் இருப்பதால் வியாபாரிகள், அரசுப்பணியாளர்கள், தொழிலாளர்கள், விவசாயிகள் ஆகியோர் விழிப்புடன் செயல்படுவது நல்லது. கடுமையாக உழைக்க வேண்டிவரும். மக்களால் சிறுசிறு பிரச்னைகள் ஏற்பட்டு, குரு பலத்தால் விலகும். வேலையாட்களால் அனுகூலமிராது. 26-ஆம் தேதி முதல் செவ்வாய் 7-ஆமிடம் மாறுவது சிறப்பாகாது. மற்றவர்களிடம் சுமுகமாகப் பழகுவது அவசியமாகும். கோபத்தைக் குறைத்துக் கொள்வதன் மூலம் சங்கடங்களுக்கு ஆளாகாமல் தப்பலாம்.
அதிர்ஷ்ட தேதிகள்: மே 26, 27.
திசைகள்: தென்கிழக்கு, தெற்கு, தென்மேற்கு, வடகிழக்கு.
எண்கள்: 3, 4, 6, 9.
--------------------------------------------------------------------------------
மீனம்: பூரட்டாதி 4-ஆம் பாதம் முதல், உத்திரட்டாதி, ரேவதி முடிய.
ராசிநாதன் குரு ஜன்ம ராசியிலேயே உலவுவதால் மதிப்புக்கும் அந்தஸ்துக்கும் குறைவிருக்காது. முக்கியமான ஓரிரு காரியங்கள் நிறைவேறும். திரவப் பொருட்கள் லாபம் தரும். 2-ல் புதன் இருப்பதால் வாக்குவன்மை கூடும். குடும்பத்தில் சுப காரியங்கள் நிகழும். நண்பர்களும் உறவினர்களும் உதவி புரிவார்கள். மன உற்சாகம் நிறைந்திருக்கும். கணிதம், எழுத்து, பத்திரிகை, தரகு போன்ற இனங்கள் லாபம் தரும். நிலபுலங்களால் ஆதாயம் கிடைக்கும். சூரியன் 3-ல் இருப்பதால் எதிர்ப்புக்கள் விலகும். அரசு விவகாரங்களில் நல்ல திருப்பம் உண்டாகும். முக்கியமானவர்கள் உங்களுக்கு உதவுவார்கள். புதிய பதவிகளும் பட்டங்களும் வந்து சேரும். அரசியல் ஈடுபாடு ஆக்கம் தரும். சுக்கிரன் 4-ல் இருப்பதால் கலைஞர்களுக்கு அளவோடு நலம் உண்டாகும். 10-ல் உள்ள ராகு வெளிநாட்டுத் தொடர்பால் அனுகூலத்தை உண்டுபண்ணுவார். சனி 7-ல் இருப்பது சிறப்பாகாது என்றாலும் குரு பார்வையில் இருப்பதால் சனியால் விளையக்கூடிய சங்கடங்கள் குறையும். 4-ல் கேது இருப்பதால் தாய் நலனில் கவனம் தேவை. சொத்துக்கள் சம்பந்தப்பட்ட பிரச்னைகள் உண்டாகும். 26-ஆம் தேதி முதல் செவ்வாய் 6-ஆமிடம் மாறுவதால் உங்கள் மனத்தில் துணிவு கூடும். செயலில் வேகம் பிறக்கும். எதிரிகள் ஓடி ஒளிவார்கள். பொறியியல் துறை லாபம் தரும். செய்து வரும் தொழிலில் அபிவிருத்தி காணலாம்.
அதிர்ஷ்ட தேதிகள்: மே 23, 24.
திசைகள்: வடக்கு, தென்கிழக்கு, தென்மேற்கு.
எண்கள்: 4, 5, 6.
-----------------------------------------------------------------
Sunny Leone a true Canadian DESI now back in India !.
%^%^&&*&*@@$#$#%%%T^&&(*(#@!@()_)(&!@!##$#$$$%^^%@@
thanks anyways, but then vandematram, your efforts are wasted here since not many people can read tamil. It is a wonderful language to express.
-----------------------------------------------------------------
The best way to find yourself is to lose yourself in the service of others.”
Mahatma Gandhi
Advertise Contact Us Privacy Policy and Terms of Usage FAQ Canadian Desi © 2001 Marg eSolutions Site designed, developed and maintained by Marg eSolutions Inc. |